நட்சத்திர விருட்சங்கள்(மரங்கள்):–

அஸ்வினி

1 ம் பாதம் – காஞ்சிதை (எட்டி)

2 ம் பாதம் – மகிழம்

3 ம் பாதம் – பாதாம்
4 ம் பாதம் – நண்டாஞ்சு

பரணி

1 ம் பாதம் – அத்தி

2 ம் பாதம் – மஞ்சக்கடம்பு

3 ம் பாதம் – விளா

4 ம் பாதம் – நந்தியாவட்டை

கார்த்திகை

1 ம் பாதம் – நெல்லி

2 ம் பாதம் – மணிபுங்கம்

3 ம் பாதம் – வெண் தேக்கு

4 ம் பாதம் – நிரிவேங்கை

ரோஹிணி

1 ம் பாதம் – நாவல்

2 ம் பாதம் – சிவப்பு மந்தாரை

3 ம் பாதம் – மந்தாரை

4 ம் பாதம் – நாகலிங்கம்

மிருகஷீரிஷம்

1 ம் பாதம் – கருங்காலி

2 ம் பாதம் – ஆச்சா

3 ம் பாதம் – வேம்பு

4 ம் பாதம் – நீர்க்கடம்பு

திருவாதிரை

1 ம் பாதம் – செங்கருங்காலி

2 ம் பாதம் – வெள்ளை

3 ம் பாதம் – வெள்ளெருக்கு

4 ம் பாதம் – வெள்ளெருக்கு

புனர்பூசம்

1 ம் பாதம் – மூங்கில்

2 ம் பாதம் – மலைவேம்பு

3 ம் பாதம் – அடப்பமரம்

4 ம் பாதம் – நெல்லி

பூசம்

1 ம் பாதம் – அரசு

2 ம் பாதம் – ஆச்சா

3 ம் பாதம் – இருள்

4 ம் பாதம் – நொச்சி

ஆயில்யம்

1 ம் பாதம் – புன்னை

2 ம் பாதம் – முசுக்கட்டை

3 ம் பாதம் – இலந்தை

4 ம் பாதம் – பலா

மகம்

1 ம் பாதம் – ஆலமரம்

2 ம் பாதம் – முத்திலா மரம்

3 ம் பாதம் – இலுப்பை

4 ம் பாதம் – பவளமல்லி

பூரம்

1 ம் பாதம் – பலா

2 ம் பாதம் – வாகை

3 ம் பாதம் – ருத்திராட்சம்

4 ம் பாதம் – பலா

உத்திரம்

1 ம் பாதம் – ஆலசி

2 ம் பாதம் – வாதநாராயணன்

3 ம் பாதம் – எட்டி

4 ம் பாதம் – புங்கமரம்

ஹஸ்தம்

1 ம் பாதம் – ஆத்தி

2 ம் பாதம் – தென்னை

3 ம் பாதம் – ஓதியன்

4 ம் பாதம் – புத்திரசீவி

சித்திரை

1 ம் பாதம் – வில்வம்

2 ம் பாதம் – புரசு

3 ம் பாதம் – கொடுக்காபுளி

4 ம் பாதம் – தங்க அரளி

சுவாதி

1 ம் பாதம் – மருது

2 ம் பாதம் – புளி

3 ம் பாதம் – மஞ்சள் கொன்றை

4 ம் பாதம் – கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்

1 ம் பாதம் – விளா

2 ம் பாதம் – சிம்சுபா

3 ம் பாதம் – பூவன்

4 ம் பாதம் – தூங்குமூஞ்சி

அனுஷம்

1 ம் பாதம் – மகிழம்

2 ம் பாதம் – பூமருது

3 ம் பாதம் – கொங்கு

4 ம் பாதம் – தேக்கு

கேட்டை

1 ம் பாதம் – பலா

2 ம் பாதம் – பூவரசு

3 ம் பாதம் – அரசு

4 ம் பாதம் – வேம்பு

மூலம்

1 ம் பாதம் – மராமரம்

2 ம் பாதம் – பெரு

3 ம் பாதம் – செண்பக மரம்

4 ம் பாதம் – ஆச்சா

பூராடம்

1 ம் பாதம் – வஞ்சி

2 ம் பாதம் – கடற்கொஞ்சி

3 ம் பாதம் – சந்தானம்

4 ம் பாதம் – எலுமிச்சை

உத்திராடம்

1 ம் பாதம் – பலா

2 ம் பாதம் – கடுக்காய்

3 ம் பாதம் – சாரப்பருப்பு

4 ம் பாதம் – தாளை

திருவோணம்

1 ம் பாதம் – வெள்ளெருக்கு

2 ம் பாதம் – கருங்காலி

3 ம் பாதம் – சிறுநாகப்பூ

4 ம் பாதம் – பாக்கு

அவிட்டம்

1 ம் பாதம் – வன்னி

2 ம் பாதம் – கருவேல்

3 ம் பாதம் – சீத்தா

4 ம் பாதம் – ஜாதிக்காய்

சதயம்

1 ம் பாதம் – கடம்பு

2 ம் பாதம் – பரம்பை

3 ம் பாதம் – ராம்சீதா

4 ம் பாதம் – திலகமரம்

பூரட்டாதி

1 ம் பாதம் – தேமா

2 ம் பாதம் – குங்கிலியம்

3 ம் பாதம் – சுந்தரவேம்பு

4 ம் பாதம் – கன்னிமந்தாரை

உத்திரட்டாதி

1 ம் பாதம் – வேம்பு

2 ம் பாதம் – குல்மோகர்

3 ம் பாதம் – சேராங்கொட்டை

4 ம் பாதம் – செம்மரம்

ரேவதி

1 ம் பாதம் – பனை

2 ம் பாதம் – தங்க அரளி

3 ம் பாதம் – செஞ்சந்தனம்

4 ம் பாதம் – மஞ்சள்பலா

தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து , வளம் பெறுங்கள்..

சில மரங்கள் – நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம். அருகில் இருக்கும் சித்த மருத்துவரையோ, அல்லது , கூகுளில்தேடிப் பாருங்கள்.. கிடைக்காவிட்டால் அந்த நட்சத்திரத்துக்கு மற்ற பாதங்களுக்குரிய – பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம்.

மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு. அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது , நீங்கள் அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது..

27 நட்சத்திரங்களும், மரங்களும்;

—————————————————

ஒருவர் பிறந்த நாள் தேதி, நேரம், விநாடி அடிப்படையிலும், பஞ்சாங்க அடிப்படையிலும் ஜாதகம் உருவாக்கப்படுகிறது. 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் அதற்குரிய எண், நிறம், கல், அதிதேவதை, பரிகார மரம் என அனைத்தும் உண்டு அதுபோல் மரங்களும் உண்டு

27நட்சத்திரத்திற்குரிய மரங்கள்

அஸ்வதி – எட்டிமரம்,

பரணி-நெல்லி,

கார்த்திகை – அத்தி,

ரோகிணி – நாவல்,

மிருகசீர்ஷம் – கருங்காலி,

திருவாதிரை – செங்கருங்காலி, 

புனர்பூசம் – மூங்கில், 

பூசம் – அரசு, 

ஆயில்யம் – புன்னை, 

மகம் – ஆல், 

பூரம்- பலாசம், 

உத்திரம் – அலரி, 

ஹஸ்தம் – அத்தி, 

சித்திரை – வில்வம், 

ஸ்வாதி – மருது,

 விசாகம் – விளா, 

அனுஷம் – மகிழ், 

கேட்டை – பிராய், 

மூலம் – மரா, 

பூராடம் – வஞ்சி, 

உத்திராடம் – பிலா,

 திருவோணம் – எருக்கு, 

அவிட்டம் – வன்னி,

 சத்யம் – கடம்பு, 

பூரட்டாதி – தேவா, 

உத்திரட்டாதி – வேம்பு, 

ரேவதி- இலுப்பை 

என 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்களாகும்.

அந்தந்த நட்சத்திரகாரர்கள்,அவர்களுக்குடைய மரங்களை நட்டால்,அவர்களுக்குடைய கர்மவினைகள் தீரும்.ஜாதகத்தில் தோசங்கள் இருந்தால் குறையும்.

பொதுவாகவே மனிதர்களுக்கு சிலரை பிடிக்கும்,பலரை பிடிக்காமல் போகும்.அவர்கள் செய்யும் செயல்களோ,சேவைகளோ பெரும்பாலும் சுயநலத்தின் வெளிப்பாடு இருக்கும்.ஆனால் மரமோ நல்லவர்கள்,தீயவர்கள் அனைவருக்கும் காற்றையும்,நிழலையும் தருகிறது.பறவைகளுக்கு புகலிடமாக இருக்கிறது.எத்தனையோ மனங்களை குளிரவைக்கிறது.ஆதலால் அந்தந்த நட்சத்திரகார்கள் நடும் மரம் மேலும்,மேலும் நமக்கு புண்ணியத்தையும்,செல்வத்தையும் கொடுக்கும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்